பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்கூட உரியவகையில் விநியோகம் செய்யப்படாத நிலையில், மதுவுக்கு இவ்வாறு முன்னுரிமை வழங்குவது வெட்கத்துக்குரிய செயலாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.










