மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன், கொட்டகலை ரொட்டெக்ட் கழகத்தின் அனுசரணையில் இந்த கண்காணிப்பு பிரிவு புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்பு பிரிவினை பதில் மாவட்ட வைத்திய அதிகாரி.எம்,ஆர்.என் பாதிமா தலைமையில் இன்று (10) திகதி திறந்து வைக்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில், பல மில்லியன் ரூபா செலவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200 பேர் தங்கியிருந்து சிகச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கமும் கொடை வள்ளர்களும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதில் ஒரு பகுதியாக குறித்த தீவிர கொரோனா நோயாளர் கண்காணிப்பு பிரிவு இயங்கும்.
பதில் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.ஆர்.எம் பாத்திமா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ரொட்டெக்ட் கழகத்தின் முன்னாள் தலைவி அர்ச்சனா பஞ்சாட்சரம், தலைவர் தியாகராஜா, இணைப்புச் செயலாளர் சங்கரலிங்கம் ,ரூபதர்சன் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் அருள்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.