மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மே தின உரையில் சஜித் சவால்!

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி பலவீனமான எதிரணி எனக் கூறுவதற்கு சிலர் முற்படுகின்றனர்.

ஆனால் பலம்பொருந்திய அரசாங்கத்தின் சபாநாயகரை வீட்டுக்கு அனுப்பினோம். எரிசக்தி அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினோம்.

எனவே, நாம் வலுவாகவே இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியும் எம்முடன் இணையும்.

இந்த நாளில் ஜனாதிபதிக்கு சவாலொன்றை விடுக்கின்றேன். அதாவது மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகின்றேன்.
அவ்வாறு நடத்தினால் எமது முதலமைச்சர்களின்கீழ்தான் அடுத்த மே தினம் நடத்தப்படும்.” – என்றார் சஜித்.

 

 

 

Related Articles

Latest Articles