” நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மதுபானசாலைகளை திறப்பதற்கு கலால் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி அவசியம். அவர்களின் அனுமதியின்றி அதனை செய்யமுடியாது. எனவே, மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் அதன்மூலம் மக்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.எதிர்காலத்திலும் இந்நிலைமை தொடர்ந்தால் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் செல்லவேண்டிவரும். மாற்றுவழியில்லை.\
மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரிகள் அவதானமாகவே இருக்கவேண்டும். மேற்கூறப்பட்ட நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்ககூடாது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு இடமளிக்கப்பட்டமை, எந்த அடிப்படையில் என தெரியவில்லை.” -என்றார்.