நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 வீதமானோர் குறித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களில் 75,000 இற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.