கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமெரிக்க மாகாணங்களை புரட்டி போட்ட புயல்!

கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

அங்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், அந்தக் கொடிய வைரசின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் சூழலில், இயற்கைப் பேரிடர்களும் தன் பங்குக்கு அமெரிக்காவை உலுக்கி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை இசையாஸ் என்ற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த புயல், வடக்கு கரோலினா மாகாணத்தில் ஓஷன் இஸ்லே கடற்கரை பகுதியில் கரையை கடந்தது.

அப்போது, மணிக்கு, 136 கி.மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக, பலத்த காற்று வீசியது. கடல் அலைகள், 5 அடிக்கு மேல் எழும்பின.

புயலைத் தொடர்ந்து வடக்கு கரோலினாவில், இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம், புயலின் தாக்கம் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இதனால், வடக்கு கரோலினாவின் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும் வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாகி இருப்பதால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வடக்கு கரோலினாவை தொடர்ந்து பென்சில்வேனியா, மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களிலும் இசையாஸ் புயல் தனது வேகத்தை காட்டியது.

சூறாவளி காற்று சுழன்றடித்ததில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.

இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

இசையாஸ் புயலால் வடக்கு கரோலினாவில் 2 பேர், பென்சில்வேனியாவில் 2 பேர், மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் மாகாணங்களில் தலா ஒருவர் என இதுவரை 6 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles