அடை மழையால் நுவரெலியாவில் வரலாறுகாணாத வெள்ளம்!

நுவரெலியா, கந்தப்பளை , ராகலை ஆகிய பிரதேசங்களில் முன்தினம் ( 29.10.2021) வெள்ளிக்கிழமை மாலை பெய்த கடும் மழையினால் மேற்படி பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம், ராகலை நடுகணக்கு, ஐபொரஸ்ட் , கோணபிடிய , டயகம உட்பட பல பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பல இடங்களில் வீடுகளும் பாதிப்புக் குள்ளாகியுள்ளன.

Related Articles

Latest Articles