‘1000 ரூபாவை நானே பெற்றுக்கொடுத்தேன்’ – இ.தொ.காவின் கோட்டையில் வைத்தே முழங்கினார் நிமல்

தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாட்டை ஆட்சி செய்த பலமான ஒரு கட்சியாகும். எனினும் இப்போது சிறிய பின்னடைவை சந்தித்துள்ளது. நாம் எமது மத்திய செயற்குழுவின் அனுமதிக்கமையவே,கடந்த நல்லாட்சியில் இணைந்தது செயற்பட்டோம். மாறாக தனிப்பட்ட முடிவுக்கமைய செல்லவில்லை.

நல்லாட்சியில் ரணிலுக்கும். மைத்திரிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் பிளவுகள் ஏற்பட்டன. முன்பு இருந்ததை விட எமது கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது உண்மை.

அதேபோல் பொதுஜன முன்னணியடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டதால் எமக்க 14 ஆசனங்கள் கிடைத்தன. விருப்பு வாக்கு பிரச்சினை அனைத்து கட்சிகளில் உள்ளது . அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகின்றோம்.

எமது கட்சி சார்பில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமை கட்சி ஆதரவாளர்களிடையே ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் மறைப்பதில்லை. இதுவே கூட்டணி அரசியலின் சுபாவம்.

எமது ஆதரவாளர்களையும் கட்சியையும் வென்றால் மாத்திரமே குறுகிய காலத்தில் சுத்திர கட்சி தீர்மானமிக்கதாய் மாறும்.ஆகவே எமது கொள்ளைகளையும், வேலைத் திட்டங்களையும் கொண்டுச் செல்ல வேண்டும். இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தம் விவாதித்தக் கொண்டிருந்தால் எம்மால் இலக்கை அடைய முடியாது.

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தது நாமே. எதிர்காலத்தில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவது அவசியம். எவரும் வரலாம். நாம் ஒருவரையம் வெட்டுவதில்லை. ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles