பலாங்கொடை தமிழ் கல்வி வளர்ச்சியில் இராஜரட்ணம் எனும் நாமம் கௌரவத்துக்குரியது! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் புகழாரம்-

இ/கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியின் அதிபர், கோவிந்தன் இராஜரட்ணம்  தமது அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெரும் இந்நாளில் அவர் எமது சமூகத்திற்கு செய்த கல்விச் சேவையானது அளப்பரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தமது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கோவிந்தன் இராஜரத்தினதுக்கு  வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் மயில்வாகனத்துடன் இணைந்து கௌரவித்துள்ளார்.

மாரதென்ன தெத்தனகல தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தனது கல்வியை  இந்துக் கல்லூரியில் கற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு ஆசிரியராக, அதிபராக தமிழ் கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்துள்ளார். கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியின் பரீட்சைப் பெறுபேறுகள் வளர்ச்சிக்காக அயராது பாடுப்பட்டு, உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளை தமது காலப்பகுதியில் ஆரம்பித்து, தனது அதிபர் பதவியை மிளிரச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஓய்வுக்காலம், அவருக்கு தேக ஆரோக்கியத்துடன் கூடிய, நிம்மதியான காலப்பகுதியாக அமைய வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள்  தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வியின் கலையகமாக,
கலை தேவி பெற்றெடுத்த ஒரு தவப்புதல்வராக,
கனகநாயகத்தின் பெரு விருட்சமாக மணிமகுடம் சூடி,
சமூகத்தின் கலங்கரை விளக்காக சமூகப் பணிகள் பல செய்து நம் மண்ணில் நற்பிரஜைகளை உருவாக்கியவர்.

மணி விழா கொண்டாடும் இந்நாள் உங்களது ஓய்வு நாளல்ல?
பவள விழாவாக,
அமுத விழாவாக,
நூற்றாண்டு விழாவாக உங்களது சேவை தொடரும் என்ற நம்பிக்கையில் இன்றைய தினம் அறுபதாவது அகவை தினத்தை கொண்டாடும் கனகநாயகத்தின் அதிபரான திரு.இராஜரட்ணம் நீண்ட ஆயுளோடும் நிறைந்த ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்து பூ மாலை சூடுகிறோம்…

என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles