சீரற்ற காலநிலையால் பதுளையில் 3,198 பேர் பாதிப்பு – 647 வீடுகளுக்கு சேதம்!

நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 65 அயிரத்து 698 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

ஆயிரத்து 509 வீடுகள் பகுதியளவும், 41 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

இடம்பெயர்ந்தவர்களில் 45 ஆயிரத்து 721 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 12 ஆயிரத்து 448 பேர் பாதுகாப்பான
இடங்களிலும் தங்கியுள்ளனர். 3, 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 647 வீடுகள் பகுதியளவும், 11 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles