வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் அபிவிருத்திக்கான ஒரு முக்கிய கருவி என்கிறது HNB

25 நவம்பர் 2021: அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் ஆற்றலை அடிப்படையாகக்கொணடு, இலங்கைக்கு உள்நோக்கி அனுப்பும் பணத்தை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முயற்சிகளுக்கு ஆதரவாக, முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அவர்களது சிறந்த வாடிக்கையாளர்களை அங்கீகரித்து பரிசில்களை வழங்கியது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக, இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அஜித் நிவார்ட் கப்ரால், உதவி ஆளுநர், டி குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து 100,000 ரூபா பரிசு வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், “வெளிநாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு இலங்கையர்களுக்கும் தங்கள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த சம்பாத்தியத்தை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பணம் அனுப்புபவர்களுக்கும் பணம் பெறுபவர்களுக்கும் ஒரு நன்மை மட்டுமல்ல, நம் தேசத்திற்கு ஒரு மகத்தான மதிப்புமிக்க நன்மையும் கூட. இந்தக் காரணிகளை ஒப்புக்கொள்வதன் மூலம், உத்தியோகபூர்வ தளங்களைப் பயன்படுத்தி பணம் அனுப்புபவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சலுகைகளை வழங்குவது முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.

அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் 2 ரூபாய் வழங்குவது மற்றும் கூடுதல் வரிச் சலுகைகள் போன்ற இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உடனடி நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

அதேபோல, இந்த நிதியைப் பயன்படுத்தி தொழில் தொடங்கினால், கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும். வெளிநாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு இலங்கையர்களும் ஒரு முக்கியமான நபராக கருதப்பட வேண்டும்.

அவர்களின் சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் இந்த வாய்ப்பை அவர்கள் அதிகபட்சமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு அவசியமான வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான எமது முக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உடனடியாக முன்வந்தமைக்காக HNBக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.

7 பில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 9 பில்லியன் டொலராக வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட மற்ற முயற்சிகளில், CBSLஆனது வங்கித் துறையுடன் இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் அனுப்ப உதவும் மொபைல் செயலியான (App) SL-Remit ஐ உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 703 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாத வரவு பாதியாக 353 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளதுடன், சமீபத்திய மாதங்களில் பணியாளர்கள் அனுப்பும் தொகை குறைந்துள்ளது. முதல் ஒன்பது மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பணம் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 9% ஆக குறைந்து 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது.

“முறையான வங்கி வழிகள் மூலம் தங்களுடைய விலைமதிப்பற்ற வெளிநாட்டு நாணயத்தை அனுப்ப விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தேசிய அளவிலும் வங்கி அளவிலும் புதிய சலுகைகளுக்கு மதிப்பளிக்கப்படுவார்கள்.

பணம் அனுப்பும் துறையில் HNBஇன் 40 ஆண்டுகால பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, புலம்பெயர்ந்த வெளிநாட்டில் வேலைபார்க்கும் இலங்கையர்களின் நலன்கள் மற்றும் வசதிகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இலங்கைக்கான வரவுகளை ஒழுங்குபடுத்துவதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம்.” என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் கூறினார்.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பணம் அனுப்பும் அனுபவத்துடன், HNB வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கியியல் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வழக்கமான தொடர்பு புள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை நியமித்துள்ளது.

HNBஇன் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் சேவைகள் (Remittance Services), ஒவ்வொரு மக்கள்தொகை கொண்ட கண்டத்திலும் உள்ள வங்கியின் உலகளாவிய பங்குதாரர்களின் வலைப்பின்னல் மூலம் பணத்தை அனுப்புவதற்கு வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.

HNBஇன் உலகளாவிய வலையமைப்பு, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட பங்ககுதாரர்களளுடன் கைகோர்த்துள்ளது, இங்கு இலங்கை ரூபாவுடன் (LKR) 13 நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் வைப்பு செய்யலாம்.

2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் HNB டிஜிட்டல் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் 15% அதிகரிப்பை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பதிவு செய்துள்ளது, இது இலங்கையில் இருந்து வெளியேறியவர்களுக்கு அட்டை இல்லாமல் பணம் பற்று வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது மற்றும் நிறுவனங்களுக்கு HNB RippleNet blockchain வசதியை அறிமுகப்படுத்தியதும் காரணமாக அமைந்தது. அதன் கடந்த நிதியாண்டின் முடிவில், வெளிநாட்டிலிருந்து அனுப்பப் பெற்ற மொத்த தொகை 203 பில்லியன் ரூபாவுக்கும் மேலாக பதிவு செய்துள்ளது.

பெறுநர்களுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை வசதியாக அணுகுவதற்கு வங்கி பல பணப் பரிமாற்ற தீர்வுகளை வழங்குகிறது. நாடு முழுவதிலுமுள்ள அதன் கிளைப் பீடங்களில் பணத்தைப் பெறுவதற்கும், 780+ ATMகளில் உள்ள ‘கார்ட் இல்லாத பணம் மீளப் பெறும் வசதி’யைப் பயன்படுத்தி ATMகள் மூலம் பணத்தைப் பெறுவதற்கும் வங்கி உதவுகிறது. HNB வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை உடனடியாக வேறு ஏதேனும் உள்ளூர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறது. தடையற்ற பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, ஆண்டு முழுவதும் 24×7 என்ற அடிப்படையில் பணம் அனனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கி செயல்படுத்துகிறது.

நாடு முழுவதும் 254 வாடிக்கையாளர் நிலையங்களைக் கொண்டுள்ள HNB இலங்கையின் மிகப் பெரிய, தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான வங்கிகளில் ஒன்றாகும், டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னோக்கி செலுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்காக உள்ளூர் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. HNB ஆனது Fitch Ratings (Lanka) Ltdஇன் தேசிய மதிப்பீட்டில் AA- (lka)ஐப் பெற்றுள்ளது.

மதிப்புமிக்க பிரிட்டனை தளமாகக் கொண்ட பேங்கர் சஞ்சிகையால் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக உலகின் சிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் வங்கியும் இடம் பெற்றுள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் விருதுகள் 2020இல் HNB இலங்கையின் சிறந்த துணைக் காப்பாளர் (Sub-Custodian) வங்கியாகவும் அறிவிக்கப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles