பஸிலுக்காகவே அவசரமாக திருத்தப்படுகின்றது ’19’!

அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ராஜபக்சக்களின்கீழ் 141 அரச நிறுவனங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட வகிக்காத பஸில் ராஜபக்சவின்கீழ் உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் 7 திணைக்களங்கள் உள்ளன. ஜனாதிபதி செயலணி பிரதானியாக அவரே செயற்படுகின்றார்.

இந்நிலையில் அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை இயக்கும் அமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்காகவே 19 ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக்கூறியவர்கள் அவசரமாக 19 ஐ திருத்துவதன் நோக்கமும் இதுதான்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles