தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2020 ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் க.பொ.த. உயர்தரப்பரீட்சை 2020 ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை 2021 ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் விசேட அறிக்கையொன்றை விடுத்து கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலை விடுமுறை காலப்பகுதிக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பதுடன் டிசம்பர் 23 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும்.