உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் நேரலையில் தோன்றிய செய்தியாளர் கைது

ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் வந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .

அதில்,”போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் ” என எழுதப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மொஸ்கோ நகர பொலிஸார் செய்தியாளரை கைது செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles