ரஸ்யாவிடம் இருந்து தேவையான மசகு எண்ணையை இறக்குமதி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பட்டுள்ளது.
மேலும், மாற்று வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு ரஸ்யாவிடம் இருந்து மசகு எண்ணையை கொள்வனவு செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
