குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமது பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றைய தினம் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை 7.30 முதல் 4.30 வரை கொன்சியூலர் அலுவலகங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே இன்று வழங்கப்படும் என வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளியுறவு அமைச்சின் தூதரக அலுவலகங்கள் நாளைய தினம் மூடப்பட்டிருக்குமென்பதுடன், நாளை மறுதினம் முதல் வழமை போன்று செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles