வரிசை நீள்கிறது – இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் வரிசைகளில் காத்திருந்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குகூட அரசு பெரும் பாடு படுகின்றது.

டொலர் பற்றாக்குறையால் உரிய வகையில் இறக்குமதி இன்மையால்,  எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு பல மாதங்களாக வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு வரிசைகளில் காத்திருந்து, நோய்வாய்பட்டு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles