சீனாவின் சில நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. நோய்ப்பரவலைத் துடைத்தொழிக்கும் சீனாவின் கொள்கைக்கு அது பெரிய அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது.
ஆன்ஹுவி மாநிலத்தில் சுமார் 300 பேருக்குப் புதிதாக கொவிட்–19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள இரண்டு வட்டாரங்களில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சியாங்சூ மாநிலத்தின் வூஸி வட்டாரத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. அவசியத் தேவையிருந்தாலன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸெச்சியாங் மாநிலத்தில் மூவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்குள்ள யிவு விமானநிலையத்திலிருந்து பீஜிங் செல்லும் விமானச்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.