கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மரத்தில் பதாகை ஒன்றை கட்டிக் கொண்டிருந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி (16) உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
5 பலட்டியாவ, மகுல்தமன, திம்புலாகலையில் வசிக்கும் மல்தெனிய பகுதியைச் சேர்ந்த நிஷான் கனிஷ்க சந்தருவன் மல்தெனிய (25) என்பவரே உயிரிழந்தவராவார்.
