“இலங்கைப்படையினருக்கு எதிராக
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட சிரேஷ்டஇராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உரிய பதிலை கூட்டத்தொடரில் வழங்கியுள்ளார். இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லை, போலியான முறையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது. அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே சுமத்தப்பட்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது என மிகவும் தெளிவாக அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.
போருக்கு பின்னர் நல்லிணக்கம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன, இக்குழுக்கள் ஊடாககூட மேற்படி படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. ” – என்றும் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
” போர் முடிவடைந்ததிலிருந்தே இப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை இதுவாகும்.பின்னணியில் அரசசார்பற்ற அமைப்புகளும் உள்ளன. அவர்கள் எப்படிதான் செயற்பட்டாலும்,எவ்
ஜெனிவாவில் 30/1 தீர்மானத்துக்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. இது தவறான நடவடிக்கையாகும்.மேற்படி தீர்மானத்தை எமது அரசாங்கம் விலக்கிக்கொண்டுள்ளது. ” – என்றார்.