நீர் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்போதே நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles