சபுகஸ்கந்தவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ பரவியுள்ளது.
இந்நிலையில், தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
தீக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
