வருவாய்கள் மற்றும் செலவீனங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் குறித்த சரியான தகவல்களைப் பெற்றுக் கொண்டு நிதிச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகத் தனியான வரவுசெலவுத்திட்ட அலுவலகமொன்றை பாராளுமன்றத்தில் அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.










