இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்காக இந்தப் பணம் வழங்கப்பட உள்ளதாகவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்ப அலகுகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
