ஒன்பது வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தி

ஒன்பது வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய சிறுமியைத் தாக்கிய 29 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles