நாடு திரும்பும் பசில் ராஜபக்ச

தற்போது அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பொரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்ட பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தார்.

அத்துடன், அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு வரவிருந்தார்.

எனினும், 22 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக பசில் ராஜபக்ச இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.

Related Articles

Latest Articles