கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவித்தல்!

கொழும்பில் சில பகுதிகளில்  நாளை (02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பதலே எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

Related Articles

Latest Articles