அரநாயக்க, செலாவ பிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ரணநாயக்க மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
