சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமை யிலான உயர் மட்டக்குழு ஒன்று இன்று கொழும்பு வரவுள்ளது.
இக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை மட்டும் சந்திக்கும் எனவும், சர்வதேச தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனாவை எதிர் கொள்வது மற்றும், பொருளாதார உறவுகளைப் புதுப்பிப்பது போன்ற இரு தரப்பு விடயங்களையிட்டு ஆராய்வதற்காகவே இந்தக் குழு அவசர
மாக இலங்கை வருகின்றது.எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை ஜனாதிபதியையும் பிரதமரையும் இக்குழுவினர் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பைத் தவிர வேறு இடங்களுக்கு இவர்கள் செல்லமாட்டார்கள்எனவும், ஜனாதிபதி, பிரதமரைத் தவிரவேறு சந்திப்புக்களில் ஈடுபடமாட்டார்கள்எனவும் தெரிவிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்படும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளுடனேயே இவர்களுடைய விஜயம்இடம்பெறும். கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியதையடுத்து இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு உயர்ட்டக்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
