பயணிகள் பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று (01 ) கைச்சாத்தானது.
போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மாகும்புர – காலி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களுக்கான இந்தப் புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,
விரைவில் நாடு முழுவதும் அமுல்கூடிய விரைவில் இந்த முறை நாடு முழவதும் விரிவுபடுத்தப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் கையடக்க தொலைபேசியூடான செலுத்துகைகளும் செயற்படுத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










