பசறையில் விபத்து – இருவர் காயம்

பதுளை, பசறை நகரில் இன்று (10 ) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அம்பத்தனையிலிருந்து பசறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், ஆட்டோவொன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளனர். பெண்ணொருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றயவருக்கு சிறு காயமே ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles