ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், மேலும் ஒரு மாணவர்களுக்கு வைரஸ் தொற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர்கள் ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை , சுகாதார பாதுகாப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
