மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று (6) இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இருதரப்பு எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர் மற்றும் எரிசக்தி கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர்
