கித்துள் மரம் முறிந்து விழுந்ததால் கம்பளையில் போக்குவரத்து தடை

கம்பளை, போவல பகுதியில் இருந்து உனம்புவ என்ற கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய கித்துள் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், மின்சார தடையும் ஏற்பட்டது.
கம்பளை பகுதியில் நேற்று   (10) இரவு கடும் மழைபெய்த நிலையிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் நேற்று   இரவு முதல் இன்று (11) மதியம்வரை போக்குவரத்து தடைபட்டிருந்தது.  அத்துடன், மின் கம்பிகள்மீது மரம் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மின் இணைப்பை வழங்கும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மரத்தை வெட்டி அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.
மரம் முறிந்து விழும்போது இருவர் பாதைவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் எனவும், அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles