சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்போது எதிரணியில் உள்ளவர்களும் அரசுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
