யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையின் உரிமையாளரும், அந்த நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளனர்.
இருவரும் தத்தமது வீடுகளில் உயிரை மாய்த்துள்ள நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.
