ஹப்புத்தளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புத்தளை காஹகல்ல பகுதியில் லொறியொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.


பண்டாரவளை சிங்கர் விற்பனை நிலையத்தில் இருந்து வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி ஹப்புத்தளை பகுதிக்கு சென்ற லொறி மீண்டும் பண்டாரவளை நோக்கி பயணித்த வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியில் காஹகல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்ததில் சாரதி படுகாயமடைந்தார்.

காகொல்ல பிரதேச மக்களினால் அவர் உடனடியாக தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த லொறியின் சாரதி 23 வயதுடைய பண்டாரவளை லியங்காவலை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles