அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பியை கைதுசெய்வதற்காக சி.ஐ.டியின் ஆறு பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் மன்னாரிலுள்ள ரிஷாட்டின் வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான தேடுதல் தொடர்கின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.
2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் கணக்காளரும், ரிஷாட் பதியூதீன் தொடர்பான தகவல்களை மறைத்தமைக்காக அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
