முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் மணமகன் கொதிப்பு! புதுப்பெண், மாமியார் வெட்டிக்கொலை!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார்.

இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது.

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது மனைவி ரமாதேவி (வயது 45). இவர்களது மகள் ருக்மணி (20). சரவணனுக்கும், ருக்மணிக்கும் கடந்த முதலாம் திகதி திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த அன்று இரவு இருவருக்கும் ருக்மணியின் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சரவணனுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாததால் அன்று முதலிரவு நடக்கவில்லை. 2 நாட்கள் ஆகியும் சரவணன் தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால் அதிர்ந்துபோன ருக்மணி முதலிரவு நடக்காதது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

ருக்மணியின் பெற்றோர் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சரவணனிடம் ஏன் முதலிரவு நடக்கவில்லை. ஆண்மை இல்லையா என கேலி செய்தனர். இதனால் சரவணனுக்கு ருக்மணி மற்றும் அவரது பெற்றோர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

மேலும் சரவணனை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். மனைவியுடன் முதலிரவு நடக்காததை அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தெரிவித்ததால் சரவணன் அவமானம் அடைந்தார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தார்.

மகனை அவமானப்படுத்தியதால் அவர்களை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை திட்டம் தீட்டினார். திட்டத்தின் படி அவர்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வரும்படி மகனிடம் தெரிவித்தார். இதையடுத்து மனைவி மற்றும் அவரது பெற்றோரை கர்னூலுக்கு அழைத்து வந்தார்.

ருக்மணியை மாடிக்கு அழைத்துச் சென்ற சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ருக்மணி பரிதாபமாக இறந்தார்.

மேலும் வீட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது மனைவி ரமாதேவியை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டினார். வெங்கடேஸ்வரலு உயிர் பிழைக்க ரத்த காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். ஆனால் ரமாதேவி வீட்டிற்குள் சிக்கிகொண்டார். அவரை பிரசாத் வெட்டி கொலை செய்தார். வெங்கடேஸ்வரலு வீட்டில் இருந்து ரத்த காயங்களுடன் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கர்னூல் டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஸ்வரலுவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரமாதேவி, ருக்மணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles