“கடன் பெற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது” – ஜே.வி.பி. சுட்டிக்காட்டு!

” நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிவிட்டு, சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை பட்டாசு கொளுத்தி கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும்.”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை தொடர்ந்து உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெற முடியும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், அவ்வாறாயின் நாடு தொடர்ந்து கடன்சுமைக்குள் தான் இருக்கும்

உற்பத்தி துறையை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் அரசுக்குகு கிடையாது. தற்காலிக தீர்வு மாத்திரம் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது, இதனால் சமூக கட்டமைப்பில் நிலையான மாற்றம் ஏதும் ஏற்படாது.கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.” – எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles