இழுபறியில் தேர்தல் – மீண்டும் கூடுகிறது ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது.

ஏப்ரல் 25ஆம் திகதி, தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான எந்தவொரு வாக்குச்சீட்டும் அரச அச்சுத் திணைக்களத்திடமிருந்து இதுவரையில் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles