பட்டதாரி யுவதி படுகொலை! இரத்தினபுரியில் பயங்கரம்!!

இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலமொன்றுக்கு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles