தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான வேட்டையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்று சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” தேசிய வளத்தை காக்க போராடிய தொழிற்சங்க தலைவர்கள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டமை தவறான முன்னுதாரணமாகும். எனவே, தன்னிச்சையாக செயற்படுவதை அமைச்சர் கஞ்சன நிறுத்திக்கொள்ள வேண்டும்.” – எனவும் டிலான் வலியுறுத்தினார்.
