மொட்டு கட்சியின் வேட்பாளராக ரணில்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்க வேண்டும் என்ற யோசனை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை
– என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின், ஆளும் கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை.” – என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞசன விஜேசேகர தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles