பெருந்தோட்ட பாடசாலைகளுக்கென உள்வாங்கப்பட்ட 4 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் உரிய பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டதன் பின்னர் பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் துரதிஷ்டவசமாக அவர்களில் 400 பேர் இதுவரையில் எந்தவொரு பாடசாலையிலும் நியமன ஆசிரியர்களாக உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
ஆகவே இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து மேற்படி பாதிக்கப்பட்டுள்ள 400 பேரையும் ஆசிரியர்களாக உள்வாங்கு வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க
அமைச்சர் அ. அரவிந்தகுமார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள எழுத்து மூல
கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” மேல் மகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என மலையக பாடசாலை களை உள்ளடக்கியவாறு 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார்
4000 ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவோர் குறிப்பிட்ட காலப் பகுதியில் குறித்துரைக்கப்பட்ட பயிற்சி
நெறிகளை பூர்த்திசெய்து அதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாகாண கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கு மாறும் அதன்பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் என்ற ரீதியிலும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று ஆசிரிய தொழிலில் நாட்டமுடைய மலையக இளைஞர்களும் யுவதிகளும் விண்ணப்பித்து உள்வாங்கப் பட்டு பயிற்சிகளையும் நிறைவுசெய்து பின்னர் அவர்களில் பெரும் பகுதியினர் நியமனமும் வழங்கப்பட்டனர்.
எனினும் இவர்களில் சுமார் 400 பேர் உரிய பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டதுடன் அதற்கான ஆவணங்களை மாகாண கல்வி காரியாலயங்களிலும் சமர்ப்பித்துள்ளனர்.
இருந்தபோதிலும் நாட்டில் ஏற்பட்டிருந்த கொவிட் 19 தொற்று, அதன்பின்னர்
ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக மேற்படி 400 பேருக்கும்
ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் 2015 இன் பின்னர் தொடர்ச்சியாக ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுவருவதால் தங்களை நிரந்தர நியமன ஆசிரியர்கள் பட்டியலுக்குள் இணைத்துக்கொள்வதற்கு ஆவன செய்யுமாறு என்னிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மேற்படி 400 பேரும் 4000 ரூபா கொடுப்பனவையே பெற்றுவந்த நிலையில் எனது தலையீட்டின் காரணமாக அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. நீண்டகாலமாக வழங்கப்பட்டு வரும் அந்த தொகையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சினை
ஆகியவற்றுக்கு மத்தியில் வழங்கப்ப டுகின்ற 10,000 ரூபா என்ற கொடுப்பனவு போதுமானதாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட 400 பேரையும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்குமாறும் மிகத் தயவாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த கடிதத்தின் பிரதிகள் மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம்.சி. முசம்மில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன