உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையை சேர்ந்த 29 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவரும் நிலையில் வழமைபோல் இன்றும் வழங்கப்பட்டுள்ளது.
பகல் உணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போக்கு, மயக்கம் என்பன ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
நானுஓயா நிருபர்