ராஜபக்சக்களின் சகாக்களுடன் கூட்டணி இல்லை – சஜித் திட்டவட்டம்

“ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும். இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும். எனவே, இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் எந்தத் தரப்புடனும் எந்த விதமான உறவையும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தாது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாறையில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது வரிசைகள் இல்லை என்று பல நபர்கள் வீராப்பு பேசினாலும் 2019 இல் இருந்ததைப் போன்று எரிபொருள் உள்ளதா என நாம் வினவுகின்றோம். ஊட்டச்சத்தான உணவு இல்லாவிட்டாலும் தற்பெருமை பேசுவதை நிறுத்த முடியாது.

ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களிலேயே தனது நண்பர்களுக்கு பலகோடி வரிச்சலுகைகளை வழங்கிய தற்போதைய அரசு, வங்குரோத்தான நாடு இருந்ததை விட சிறப்பாக உள்ளது எனக் கூறுவது கேலிக்குரியது. வங்குரோத்து நிலைக்கும் பல்வேறு படி நிலையை அவர்களாகவே கொண்டுள்ளனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles