தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
” எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்கான ஆதரவு பெருகிவருகின்றது. தற்போது சஜித் கூட்டணியில் உள்ளவர்கள், அடுத்த தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம் வந்துவிடும்.” எனவும் அவர் கூறினார்.
