பற்றி எரிந்தது மொக்கா தோட்ட வனப்பகுதி – 6 ஏக்கர் நாசம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்ட வனப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ பரவவால் சுமார் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.

மனித செயற்பாடுமூலமே இத்தீபரவல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனுடன் தொடர்புடைய விஷமிகளை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்து கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தீயை கட்டுக்குள்கொண்டுவந்துள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் செ.தி. பெருமாள்

Related Articles

Latest Articles