கண்டி, பதுளை, மாத்தளை உட்பட நாட்டில் 18 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 84 ஆயிரத்து 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 91 ஆயிரத்து 715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் 55, 091 பேரும், கிழக்கு மாகாணத்தில் 63,265 பேரும், வடமேல் மாகாணத்தில் 23, 534 பேரும், வடக்கு மாகாணத்தில் 75, 607 பேரும், ஊவா மாகாணத்தில் 20, 052 பேரும், தென் மாகாணத்தில் 17, 372 பேரும், மத்திய மாகாணத்தில் 32, 695 பேரும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
